பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக (27/12/2020) ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது

 

அனைவருக்கும் வணக்கம்🙏🙏

பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தொடர்ந்து வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசியால் வாடும் மக்களுக்கு மதிய உணவு🍜 வழங்கப்படுகிறது 

தொடர்ந்து மூன்றாவது வாரமாக (27/12/2020) ஞாயிற்றுக்கிழமை பூரணாங்குப்பம் மற்றும் புதுவையில் உள்ள பசியால் வாடும் சுமார் 50 மக்களுக்கு மதிய உணவாக 🥗 மோர் மிளகாயுடன் புளிசாதம்🍲 மன்ற கோவில் அறங்காவல் குழு தலைவர் திரு.R.எழில்ராஜா மற்றும் மன்ற தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் இவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது,இதில் மன்றத்தின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்💪.

இன்றைய உணவு🥗🍲 வழங்குவதற்கான அனைத்து செலவையும் Two Wheeler Workshop திரு.முருகன் அவர்கள் தானாக முன்வந்து ஏற்றுக் கொண்டார்.

என்றும் மக்கள் சேவையில்,

கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,

பூரணாங்குப்பம்.


Comments

Popular posts from this blog

VANOLI BIKE TREE PLANTING (25/12/2020)

பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம்