பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக (27/12/2020) ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது
அனைவருக்கும் வணக்கம்🙏🙏
பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தொடர்ந்து வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசியால் வாடும் மக்களுக்கு மதிய உணவு🍜 வழங்கப்படுகிறது
தொடர்ந்து மூன்றாவது வாரமாக (27/12/2020) ஞாயிற்றுக்கிழமை பூரணாங்குப்பம் மற்றும் புதுவையில் உள்ள பசியால் வாடும் சுமார் 50 மக்களுக்கு மதிய உணவாக 🥗 மோர் மிளகாயுடன் புளிசாதம்🍲 மன்ற கோவில் அறங்காவல் குழு தலைவர் திரு.R.எழில்ராஜா மற்றும் மன்ற தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் இவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது,இதில் மன்றத்தின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்💪.
இன்றைய உணவு🥗🍲 வழங்குவதற்கான அனைத்து செலவையும் Two Wheeler Workshop திரு.முருகன் அவர்கள் தானாக முன்வந்து ஏற்றுக் கொண்டார்.
என்றும் மக்கள் சேவையில்,
கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,
பூரணாங்குப்பம்.
Comments
Post a Comment